Health Information

Maklumat Kesihatan

Interactive Patient Guide

Panduan Pesakit Interaktif

Skills for Life - Homecare
Health Check Online
 
 
 
 
 
Select  
 


இருமுனைக்கோடி (Biploar) மனநிலைக் கோளாறு

Page 1 | Page 2

இருமுனைக்கோடி மனநிலைக் கோளாறு என்றால் என்ன ?

இருமுனைக்கோடி மனநிலைக் கோளாறு என்பது பித்தச் சோர்வுப் பைத்தியநிலை (
Manic - depressive psychosis) (MDP ) என்றும் கூறப்படும். இவ்வகை மன நிலைக்கோளாறு என்பது மனநிலை ஊசலுள்ள தன்மையுடையது. ஆர்வமற்ற நிலைக்கும் லேசான மனநிறைவுக்கும் இடையேவான சாதாரண மன ஊசலாடும் நிலையைப் பலர் உணர்வார்கள்.
இரு முனைக் கோடி மனநிலைக்கோளாற்றில், தீவிர மனச் சோர்வுக்கும் வெற்றிச் செருக்கும், சோம்பல் நிலைக்கும் அதிக சுறுசுறுப்புக்கும் இடையே மன ஊசல் காணப்படும். பெரும்பாலான நேரங்களில் உண்மை நிலை தொடர்பு இழக்கும். எனினும் முழுமையான இயல்பு மனநிலை நீண்டநோரம் இருக்கும். பித்தச் சோர்வுயைடவர்கள் தீவிர மன ஊசலுக்கு ஆளாகி அவதியுறுவார்கள். இந்த நிலை தொடர்ந்து பலகாலம் நீளு ¢. இத்தகைய தீவிர தாக்குதல் நேரங்களில் இது மருத்துவ மனை நோயாகக் கருதப்படும். இரு முனைக்கோடி மன நிலைக் கோளாறுகளைக் கண்டறிய முற்படுமுன்னர், மருத்துவ வல்லுநரே, மனநிலை வல்லுநரோ இந்த வித்த நிலைத்தாக்கம் மனச் சோர்வுடன் கூடியுள்ளதா என்பதைப் பரிசோதிப்பார்.

பருவவாயிலில் உள்ளபோதும் சற்று வயது வந்த பின்னரும் இரு முனைக்கோடி மனநிலைக் கோளாறு தோன்றி, வாழ்நாள் முழுதும் இருக்கும். இது பல நேரங்களில் நோயாகவே கருதப் படுவதில்லை. இதனால் பீடிக்கப்பட்ட மக்கள் தேவை யற்று பல்லாண்டுகள் அவதியுறுவார்கள்.




இந்த இருமுனைமன நிலைக் கோளாறு தெனால் வருகிறது ?


இந்தக் கோளாற்றுக்கான காரணங்களைக் கண்டறிய பல ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை உறுதியான முடியுவகளேதும் இடுக்கப்படவில்லை. இது ஒரு, மரவு வழி (
genetic ) நோய்பரவலாகவும், இதனால் மற்ற குடும்ப உறுப்பினர்கள் கூட இந்நோயால் பீடிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கக்கூடும். இது தீவிர மன அழுத்த நிகழ்வுகளின் காரணமாகவும் குழந்தை பிறப்பிற்குப்பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தாலும் ஏற்படக்கூடும். எண்ணம், நடத்தை மாற்றத்திற்கான மன நிலை பொறுப்பு மூளைப்பகுதியில் ஏற்படும் இரசாயன சமமின்மையும் காரணமாக இருக்கக்கூடும்.

 

அறிகுறிகள்

1. மனச்சோர்வு
  • சோர்வுற்ற அல்லது தாழ்வு மனநிலை
  • ஆர்வமின்மை, வாழ்வில் மகிழ்ச்சி யின்மை
  • தூண்டுதலும் செயல்நோக்கமும் இல்லாமை. இதனால் எளிய செயல்களும், முடிவுகளும் கடினமாகவும் செய்ய முடியாமலும் ஆதல்.
  • முழு களைப்பு
  • மனப்போராட்டம், அமைதியின்மை
  • பசியின்மை, உடல் எடை குறைதல்
  • தூக்க மின்மை
  • வெளிப்படை அன்பின்மை, உடலுறவில் ஆர்வமிழத்தல்
  • தன்னம்பிக்கையை இழத்தல், மக்களைத் தவிர்த்தல்
  • பயனற்றதை, குறைவானதை, தீயதை, உதவியற்தை நம்பிக்கையற்றதை எண்ணுதல்
  • குற்ற உணர்வு, பயனற்ற, உதவியற்ற எண்ணங்கள்
  • ஒரு குறிப்பிட்ட நோரத்தில் பெரும்பாலும் காலை நேரம்களில் மோசமாக எண்ணுதல்
    தற்கொலை எண்ணம் இவை மன அழுத்தத்தில் பொதுவானவை. பிறர் உதவியைத் தேவைப் படுத்வின் அறிகுறிகள் இவை.


2. பித்த வெறி மற்றும் மாற்றுநிலை பித்தம் (
Maniac & Hypomania)

  • உயர்வு மனப்பான்மை
  • ஆற்றலும், செயல்களும் அதிகரித்தல்
  • தூங்க இயலாமை அல்லது தூங்க விருப்ப மின்மை
  • வேகமான பேச்சு, எண்ணங்களும் கருத்துக்களும் பாய்வு.
  • தன்னை உயர்வாகக் கருதிக்கொள்ளல்
  • முன்கோபம், பொறுமையின்மை
  • பால் உணர்வு அதிகரிப்பு மற்றும் உடலுறவு ஆர்வமின்மை
  • முடிவெடுக்க இயலாமை, சிந்திக்காமல் மடிவெடுப்பது
  • ஊதாரித்தனம், சிக்கலான, வினாவெழுப்பவல்ல செயல்களில் ஈடுபாடு
  • பெருமிதம், பகட்டான மருட்சி


இரு முனைக் கோடி மனநிலை கோளாற்றின் துவக்க அறிகுறி மாற்றுநிலை பித்தமாகும் (
hypomania). இந்த நிலையில் ஒருவன் அதிக வலிமை கொண்டும், அதிக நிலையில் ஒருவர் அதிக வலிமை கொண்டும், அதிக சிடுசிடுப்புடனும் முன் கோபத்துடன், நினைத்த அளவில் பொறுப்பற்ற நடத்தை கொண்டவராய் இருப்பார். பாதிக்கப்பட்ட வருக்கு மாற்று நிலை பத் (மானது) நல்லதென்றே படும். அவருக்கு அதில் ஏதும் தவறாகவே தோன்றாது. யாராவது அவருக்கு அது பற்றி குறிப்பிட்டால் அவர் அதை வன்மையாகக் கண்டிப்பார்.
சிலருக்குப் பட்டறிவால் அவர்களுடைய நிலையை அடையாளங் காணமுடியும். ஆனால் தீவிர முதிர்ந்த நிலையில் அனைத்தும் தெரியாமற் போகும். பாதிக்கப் படுபவர் கற்பனை மிதப்பில் சட்டப்புறம்பான செயல்களில் ஈடுபடுவது வழக்கத்திற்கு மாறானதல்ல. அதிக செலவு செய்தல், மோசடி செயதல், அதிர்ஷ்ட வசமாக, அரிதாக, மற்றவர்களை தாக்கக்கூடும்.

3. கலப்பு நிலை

ஒரு சிலர் சில சமயங்களில் பித்தத்தின் மற்றும் மன சோர்வின் கூட்டு அறிகுறிகளை உணரக்கூடும். உதாரணமாக, ஒரு உயர் தரச் செயல் குறைந்த அளவு மன ஒரு முகப்படுத்தலோகும், வாழ்வின்தான் சோர்வு மனப்பான்யுடனும் சேர்ந்திருக்கக்கூடும். இது தற்கொலை முயற்சி ஆபத்துக்கு வழிகோலக்கூடும்.

 

இயல்பு நிலை


மனச்சோர்வு காலத்திற்குப் பிறகு அல்லது பித்த நிலைக்குப்பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் வழக்கமாக இயல்பு நிலைக்கும் தனது பழைய ஆளமைத் தன்னமக்கும், சிந்திக்கும் ஆற்றலுக்கும் பழைய ஆற்றல் நிலைக்கும் எந்த வித உடற்குறையுமின்றி திரும்புவார்கள். எனினும் பாதிக்கப்பட்டவர் உறவுகளுக்கும், பணத்திற்கும் நடந்த இழப்பை எண்ணி வருந்தக்கூடும். அவர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடும். குற்ற உணர்வால் பிறரைக் காண நாணக்கூடும்.

 

இந்தத் தாக்குதல் அடிக்கடி நேரிடுமா ?


இந்தத் தாக்குதலில் அடுக்கு நிகழ்வு ஒருவருக்கும் வேறொருவருக்கும் மட்டுமேயல்ல ஒருவருக்குள்ளேயே மாறுபடும். சிலருக்குத்த தினமும், மாத்திற்கு ஒரு முறை, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என்று வழக்க சூழல் முறையில் அவர்கள் தாக்கப் படக்கூடும். மற்றவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் இச்சிக்கல் வராமலிருந்து பின்னர் தொடர்ந்து பல முறை தாக்ககூடும்.

 


Page 1 | Page 2